முன்னாள் தேர்தல் ஆணையர் சேஷனை பின்பற்றி பர்தா அணியும் பெண்களுக்கு வாக்குச்சாவடியில் தனி பிரிவு

புதுடெல்லி: பிஹார் மாநில சட்​டப் பேர​வைக்கு வரும் நவம்​பர் 6, 11-ம் தேதி​களில் 2 கட்​ட​மாக வாக்​குப்​ப​திவு நடை​பெறவுள்​ளது. தலை​மைத் தேர்​தல் ஆணை​ய​ராக டி.என். சேஷன் இருந்​த​போது பர்தா அணிந்து வரும் முஸ்​லிம் பெண்​கள் வாக்​களிக்க வாக்​குச்​சாவடிகளில் தனிப்​பிரிவு ஏற்​படுத்த உத்​தர​விட்​டார்.

அவரைப் பின்​பற்றி பிஹார் தேர்​தலிலும் அது​போன்ற தனிப்​பிரிவு​களை ஏற்​படுத்​து​மாறு தலை​மைத் தேர்​தல் ஆணை​யர், பிஹார் மாநில தேர்​தல் அதி​காரி​களுக்கு உத்​தர​வைப் பிறப்​பித்​துள்​ளார்.

பிஹார் மாநிலத்​தில் அதிக அளவில் முஸ்​லிம் பெண் வாக்​காளர்​கள் உள்​ளனர். எனவே, அவர்​களுக்கு வசதி​யாக இந்த ஏற்​பாடு​கள் நடை​பெறவுள்​ளன.

அதிக அளவில் முஸ்​லிம் பெண் வாக்​காளர் இருக்​கும் வாக்​குச்​சாவடிகளில் கூடு​தல் பெண் தேர்​தல் அதி​காரி​கள், ஊழியர்​களை நியமிக்​க​வும் தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

அதே​போல், பெண்​களுக்கு என தனி வாக்​குச்​சாவடிகள் இருக்​கும் பகு​தி​களி​லும் கூடு​தல் பெண் ஊழியர்​களை நியமிக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.