குருவாயூர் கோயில் பொக்கிஷங்களுக்க முறையான ஆவணங்கள் இல்லை: தணிக்கை அறிக்கையில் அம்பலம்

திருவனந்தபுரம்: கேரளா​வில் உள்ள குரு​வாயூர் கோயிலுக்கு சொந்​த​மாக தங்​கம், வெள்ளி ஆபரணங்​கள், பாத்​திரங்​கள், தந்​தம், பக்​தர்​கள் காணிக்​கை​யாக அளிக்​கும் பொருட்​கள் அதி​கள​வில் உள்​ளன. ஆனால், இந்த பொக்​கிஷங்​களுக்​கான ஆவணங்​கள் சரி​யாக பராமரிக்​கப்​ப​டாத​தால், முறை​கேடு​களுக்​கான வாய்ப்பு அதி​கம் உள்​ளது என குரு​வாயூர் தேவசம் வாரி​யத்​தின் தணிக்கை அறிக்கை மூலம் தெரிய​வந்​துள்​ளது.

குரு​வாயூர் தேவசம் வாரி​யத்​தின் புன்​னத்​தூர் கோட்டா சரணால​யத்​தில் கடந்த 2019-20-ம் ஆண்டு அறிக்​கை​யில் 522.86 கிலோ தந்​தம் மற்​றும் தந்​தப் பொருட்​கள் உள்​ள​தாக குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. சட்​டப்​படி தந்​தம் வனத்​துறை​யிடம் ஒப்​படைக்​கப்பட வேண்​டும். ஆனால் அவ்​வாறு ஒப்​படைக்​கப்​பட​வில்லை என வனத்​துறை அதி​காரி தெரிவிக்​கிறார்.

கோயிலுக்​குள் இருக்​கும் தங்​கம் மற்​றும் வெள்ளி பொருட்​கள் குறித்த பதிவேடு​களை ஆய்வு செய்​த​போதும் அதில் பல குறை​கள் உள்​ளன. கோயில் உபயோகத்​துக்​காக பயன்​படுத்​தப்​பட்ட தங்​கம் வெள்ளி பொருட்​களின் எடைகள் குறை​வாக உள்​ளன.

கோயி​லில் இருந்த தங்க கிரீடம், வெள்ளி ஆபரண​மாக மாற்​றப்​பட்​டுள்​ளது. கோயி​லில் இருந்த 2.65 கிலோ வெள்ளி பாத்​திரத்​துக்கு பதில் 750 கிராம் எடை​யுள்ள பாத்​திரம் மாற்​றப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை.

குரு​வாயூர் தேவசம் சட்​டம் 1978 மற்​றும் 1980-ம் ஆண்டு விதி​முறை​கள் படி கோயில் பொக்​கிஷங்​கள் ஆண்டு தோறும் சரி​பார்க்​கப்பட வேண்​டும் என்​பது கட்​டா​யம். ஆனால் அது​போன்ற சரி​பார்த்​தல் நடவடிக்கை கடந்த 40 ஆண்​டு​களாக நடை​பெற​வில்லை என தணிக்கை அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். ஒவ்​வொரு ஆண்​டும் ஜுன் 30-ம் தேதிக்​குள் கோயில் பொக்​கிஷங்​கள் ஆய்வு செய்​யப்​பட்டு தேவசம் வாரிய ஆணை​யரிடம் அறிக்கை சமர்ப்​பிக்க வேண்​டும் என்ற உத்​தர​வும் பின்​பற்​றப்பட​வில்​லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.