தீபாவளி போனஸ் தராததால் அதிருப்தி: ஆக்ரா-லக்னோ சுங்கச்சாவடியை திறந்துவிட்ட ஊழியர்கள்

ஆக்ரா: தீ​பாவளி போனஸ் தராத​தால் அதிருப்தி அடைந்த சுங்​கச்​சாவடி ஊழியர்​கள் வேலை நிறுத்​தம் செய்​தனர். இதனால் மத்​திய அரசுக்கு பல லட்​சம் ரூபாய் இழப்பு ஏற்​பட்​டுள்​ளது.

ஆக்ரா – லக்னோ எக்​ஸ்​பிரஸ் சாலை​யில் பதேஹா​பாத் பகு​தி​யில் சுங்​கச் சாவடி உள்​ளது. இங்​கு பணிபுரி​யும் ஊழியர்​களுக்கு தீபாவளி போனஸ் வழங்​க​வில்லை என்று கூறப்​படு​கிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஊழியர்​கள் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை ஆக்ரா – லக்னோ எக்​ஸ்​பிரஸ் சாலை​யில் சுங்​கச்​சாவடியை வாக​னங்​கள் கடப்​ப​தற்கு வசதியாக அனைத்து கதவு​களை​யும் திறந்து விட்​டனர்.

அதில் இரு​புற​மும் வாக​னங்​கள் அவசர அவசர​மாக கடந்து செல்​லும் காட்​சிகள் அடங்​கிய வீடியோ வைரலாயின. ஆக்ரா – லக்னோ எக்​ஸ்​பிரஸ் சாலை மட்​டுமன்றி டெல்லி செல்​லும் யமுனா எக்​ஸ்​பிரஸ் சாலை​யை​யும் திறந்​து​விட்​டனர்.

சுங்​கச் சாவடி ஊழியர்​களின் வேலை நிறுத்​தத்​தால் மத்​திய அரசுக்கு பல லட்​சம் ரூபாய் இழப்பு ஏற்​பட்​டுள்​ளது. இதுகுறித்து போராட்​டத்​தில் ஈடு​பட்ட ஊழியர்​கள் கூறும்​போது, ‘‘நாங்​கள் பல ஆண்​டு​களாக பணிபுரி​கிறோம். ஆனால், எங்​களுக்கு எந்த போனஸ் வழங்​க​வில்​லை. சம்​பளத்தை கூட சரி​யான தேதி​யில் தரு​வ​தில்​லை. இப்​போது எங்​களுக்​குப் பதில் வேறு ஊழியர்​களை பணி​யமர்த்த போவ​தாக நிறு​வனம் கூறுகிறது’’ என்​றனர்.

இதனிடையே, இந்த சுங்​கச் சாவடியை நிர்வகிக்கும் ​சாய் மற்​றும் ததார் நிறு​வனம் சார்பில் போனஸ் வழங்​கு​வ​தாக உறுதி அளிக்கப்பட்ட​தால் போராட்​டம் வாபஸ் பெறப்​பட்​டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.