சென்னை: கோவில் நிதியில் வணிக வளாகங்கள், குடியிருப்புகள் கட்டக்கூடாது! இந்து அறநிலையத் துறைக்கு மீண்டும் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே திருவண்ணா மலை கோவில் வளாகத்தில் வணிக வளாகம் கட்டப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது மீண்டும் உத்தரவிட்டு உள்ளது. கந்தக்கோட்டம் கோவில் நிலத்தில் வணிக வளாகம், குடியிருப்புகள் கட்ட தடை விதிக்கக் கோரி வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஏ.பி. பழனி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை […]