‘மோந்தா' புயலால் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல் 

சென்​னை: வங்​கக் கடலில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம், ‘மோந்​தா’ புய​லாக வலுப்​பெற்​றுள்​ளது. இதன் காரண​மாக திரு​வள்​ளூர், சென்னை உள்​ளிட்ட 9 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தென்​கிழக்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம், நேற்று நள்​ளிர​வில் ‘மோந்​தா’ புய​லாக வலுப்​பெற்​று, தென்​மேற்கு மற்​றும் அதனை ஒட்​டிய தென்​கிழக்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் நில​வியது. இது சென்​னையி​லிருந்து கிழக்கு – தென்​கிழக்கே சுமார் 520 கி.மீ தொலை​விலும், காக்​கி​நா​டா​விலிருந்து தெற்கு – தென்​கிழக்கே 570 கி.மீ தொலை​விலும் நிலை​கொண்​டுள்​ளது.

இது வடமேற்கு திசை​யில் நகர்ந்​து, இன்று காலை தீவிரப்​புய​லாக வலுப்​பெற்​று, வடமேற்கு திசை​யில் நகர்ந்​து, ஆந்​திர கடலோரப்​பகு​தி​களில், மசூலிப்​பட்​டினம் – கலிங்​கப்​பட்​டினத்​துக்கு இடையே, காக்​கி​நா​டாவுக்கு அரு​கில் தீவிரப்​புய​லாக இன்று இரவில் கரையைக்கடக்​கக்​கூடும். அச்​சம​யத்​தில் காற்​று வேகம் மணிக்கு 90 முதல் 110 கி.மீ வேகத்​தில் வீசக்கூடும். மேலும், மத்​திய கிழக்கு அரபிக்​கடல் பகு​தி​களில் ஒரு காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் நீடித்து வரு​கிறது. இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று ஓரிரு இடங்​களி​லும் புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் இடி, மின்​னலுடன் மிதமான மழை பெய்​யக்​கூடும். வடதமிழக கடலோர மாவட்​டங்கள், அதனை ஒட்​டிய மாவட்​டங்​கள், புதுச்​சேரி, காரைக்​கால் பகுதி​களில் ஓரிரு இடங்​களில் பலத்த தரைக்​காற்று வீசக்​கூடும்.

திரு​வள்​ளூர் மாவட்​டத்தில் கனமுதல் மிக கனமழை​யும் சென்​னை, செங்​கை, காஞ்சி,ராணிப் பேட்​டை, தேனி, தென்​காசி, திருநெல்​வேலி மாவட்​ட மலைப்​பகு​தி​கள் மற்​றும் கன்​னி​யாகுமரி மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இன்று கனமழை​யும் பெய்ய வாய்ப்​புள்​ளது. தமிழகம், புதுச்​சேரி கடலோ ரப் பகு​தி​கள், மன்​னார் வளை​குடா மற்​றும் குமரிக்​கடல் பகு​தி​களில் சூறாவளிக்​காற்று மணிக்கு 65 கி.மீ வேகத்​தில் வீசக்​கூடும். எனவே இப்​பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.