நூதன முறையில் லஞ்ச வசூல்: ராஜஸ்தான் உயர் அதிகாரியின் மனைவிக்கு ரூ.37.54 லட்சம் சம்பளம் வழங்கிய 2 நிறுவனம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்​தான் தகவல் தொழில்​நுட்ப துறை இணை இயக்​குனர், லஞ்​சத்தை தனது மனைவி மூலம் சம்​பள​மாக பெற்​றுள்​ளது லஞ்ச ஒழிப்​புத்​துறை விசா​ரணை​யில் கண்​டறியப்​பட்​டுள்​ளது.

ராஜஸ்​தான் தகவல் தொழில்​நுட்ப துறை​யில் இணை இயக்​குன​ராக பணி​யாற்​று​பவர் பிரத்​யு​மான் திக்​ஷித். இவரது மனைவி பூனம் திக்​ஷித். ஓரி​யான்ப்ரோ சொல்​யூஷன்ஸ் மற்​றும் ட்ரீஜென் சாஃப்ட்​வேர் லிமிடெட் ஆகிய நிறு​வனங்​கள் ராஜஸ்​தான் அரசின் டெண்​டர்​களை பெற்​று​வந்​துள்​ளன. இந்த நிறு​வனங்​களுக்கு பிரத்​யு​மான திக்​ஷித்​தான் டெண்​டர்​களை வழங்​கி​யுள்​ளார்.

இதற்கு பிர​திபல​னாக தனது மனை​வியை இந்த 2 நிறு​வனங்​களி​லும் ஊழிய​ராக கணக்​கு​காட்டி வேலைக்கு அனுப்​பாமலேயே சம்​பளம் பெற்​று​வந்​துள்​ளார்.

இது குறித்து ஒரு​வர் ராஜஸ்​தான் உயர் நீதி​மன்​றத்​தில் புகார் மனு​ தாக்​கல் செய்​தார். இதை விசா​ரணைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதி​மன்​றம், இந்த விவ​காரம் குறித்து லஞ்ச ஒழிப்​புத்​துறை விசா​ரணை நடத்த கடந்​தாண்டு உத்​தர​விட்​டது.

இது குறித்து நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு செட்​படம்​பர் வரை பூனம் திக்​ஷித்​தின் 5 வங்கி கணக்​கு​களில், ஓரி​யான்ப்ரோ சொல்​யூஷன்ஸ் மற்​றும் ட்ரீஜென் சாஃப்ட்​வேர் லிமிடெட் ஆகிய நிறு​வனங்​கள் சம்​பள​மாக ரூ.37,54,405 செலுத்​தி​யுள்ளன என்​பது கண்​டறியப்​பட்​டது. ஆனால் இந்த கால​கட்​டத்​தில் பூனம் திக்​ஷித் இரண்டு அலு​வல​கங்​களுக்​கும் ஒரு நாளும் சென்​ற​தில்​லை.

ஆனால், பூனம் திக்​ஷித் வேலைக்கு சென்​ற​தாக கணக்கு காட்​டப்​பட்ட போலி வருகைப் பதிவேட்​டுக்​கு, அவரது கணவர் பிர​தி​யு​மான் திக்​ஷித் ஒப்​புதல் அளித்​துள்​ளார். இவர் மீது ராஜஸ்​தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க உயர்​நீ​தி​மன்​றம் உத்​தர​விடும்​ என எதிர்​பார்க்​கப்​படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.