அரசுப் பள்ளிகளில் தேசிய கீதம் பாடாவிட்டால் சம்பளம் குறைப்பு

ஜெய்ப்பூர்: ​ராஜஸ்​தான் அமைச்​சர் மதன் திலா​வர் நேற்று முன்​தினம் கூறிய​தாவது: ராஜஸ்​தானில் கல்​வி, சம்​ஸ்​கிருத கல்வி மற்றும் பஞ்​சா​யத்து ராஜ் துறை​களின் கீழ் வரும் அனைத்து பள்​ளி​கள் மற்​றும் அலு​வல​கங்​களில் தின​மும் காலை​யில் தேசிய கீதமும் மாலை​யில் தேசிய பாடலும் பாடு​வது கட்​டாய​மாக்​கப்பட உள்​ளது.

இதில் பங்​கேற்​கும் ஆசிரியர்​கள், ஊழியர்​களுக்கு மட்​டுமே வரு​கைப் பதிவு தரப்​படும். வரு​கைப் பதிவு இல்​லாதவர்​கள் சம்​பளக் குறைப்பை எதிர்​கொள்ள நேரிடும். ஆசிரியர்​கள், ஊழியர்​கள் மற்​றும் மாணவர்​கள் இடையே தேசி​ய​வாத சிந்​தனையை ஊக்​கு​விப்​பதே இந்​தக் கொள்​கை​யின் நோக்​கம். இதனை செயல் ​படுத்​து​வது தொடர்​பான உத்​தரவு விரை​வில் வெளி​யாகும்.

2026 கல்​வி​யாண்டு முதல் அனைத்து அரசு மற்​றும் தனி​யார் பள்​ளி​களுக்​கும் பொது​வான சீருடை அமல்​படுத்​தப்​படும். இதில் ஆசிரியர்​களுக்​கும் சீருடை அறி​முகப்​படுத்​தப்​படும். மேலும் ஆசிரியர்​களும் மாணவர்​களும் அடை​யாள அட்டை எடுத்து வரு​வது கட்​டாய​மாக்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.