‘ஆடிசன்’ என்ற பெயரில் சிறைபிடிக்கப்பட்ட 17 சிறுவர்கள் மீட்பு: மும்பையில் நடந்த என்கவுன்ட்டரில் ஒருவர் சுட்டுக்கொலை

மும்பை: மும்பை பொவாய் பகு​தி​யில் ஆர்​.ஏ. ஸ்டூடியோ உள்​ளது. இதனை ரோகித் ஆர்யா என்​பவர் நிர்​வகித்து வந்​தார். தன்னை திரைப்பட இயக்​குநர் என்று கூறிய அவர், இணைய தொடரை (வெப் சீரிஸ்) இயக்க இருப்​ப​தாக சமூக வலை​தளங்​களில் விளம்​பரம் செய்​தார். இந்த
இணைய தொடருக்கு நடிகர், நடிகைகளை தேர்வு செய்ய அக்​டோபர் 30-ம் தேதி ஆடிசன் நடை​பெறும் என்று சமூக வலை​தளங்​களில் அவர் அறி​வித்​தார்.

இணைய தொடருக்​காக நூற்​றுக்​கணக்​கானோர் விண்​ணப்​பித்​தனர். அவர்​களில் 100 பேர் ஆடிசனில் பங்​கேற்க ரோகித் ஆர்யா அழைப்பு விடுத்​தார். இதன்​படி நேற்று காலை 17 சிறு​வர், சிறுமியர் மும்பை பொவாய் பகு​தி​யில் உள்ள ஆர்​.ஏ. ஸ்டூடியோவுக்கு சென்​றனர்.

அவர்​களை ஓர் அறை​யில் அடைத்த ரோகித் ஆர்யா வெளிப்​புற​மாக கதவை பூட்​டி​னார். அவர்​களுக்கு குடிநீர், உணவு​கூட வழங்​க​வில்​லை. அச்​சமடைந்த சிறு​வர், சிறுமியர் ஜன்​னல் கதவு​கள் வழி​யாக சாலை​யில் சென்​றவர்​களிடம் உதவி கோரினர்.

இதனிடையே ரோகித் ஆர்யா சமூக வலை​தளத்​தில் ஒரு வீடியோவை வெளி​யிட்​டார். அதில் அவர் கூறிய​தாவது: சிறு​வர், சிறுமிகளை பிணைக்​கை​தி​களாக அடைத்து வைத்​திருக்​கிறேன். நான் பெரி​தாக எந்த நிபந்​தனை​யும் விதிக்க மாட்​டேன். சில சிறிய நிபந்​தனை​களை மட்​டும் விதிப்​பேன். சில மனிதர்​களிடம் சில கேள்வி​களை எழுப்​புவேன். அதற்கு பதில் கிடைக்க வேண்​டும்.

நான் தீவிர​வாதி கிடை​யாது. பணம் கேட்​டும் மிரட்​டல் விடுக்க மாட்​டேன். தற்​கொலை செய்து கொள்ள விரும்​ப​வில்​லை. அதற்கு பதிலாக வேறு திட்​டத்தை செயல்​படுத்த முடிவு செய்​தேன். அதற்​காக சிறு​வர், சிறுமிகளை பிடித்து வைத்​திருக்​கிறேன். என்னை தாக்க முயன்​றால் ஸ்டூடியோவை தீ வைத்து எரித்து விடு​வேன். இவ்​வாறு ரோகித் ஆர்யா வீடியோ​வில் மிரட்​டல் விடுத்​தார்.

உடனடி​யாக சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்ற போலீ​ஸார், ரோகித் ஆர்​யா​வுடன் சுமார் 3 மணி நேரம் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். ஆனால் சிறு​வர், சிறுமிகளை விடுவிக்க மறுத்​து​விட்ட அவர், தன்​னிடம் துப்​பாக்​கி, ரசாயனங்​கள் இருப்​ப​தாக மிரட்​டல் விடுத்​தார்.

வேறு வழி​யின்றி ஸ்டூடியோ​வின் கழி​வறை கண்​ணாடியை உடைத்து 5 போலீ​ஸார் உள்ளே நுழைந்​தனர். அவர்​களை ரோகித் ஆர்யா துப்​பாக்​கி​யால் சுட முயன்​றார். இதைத் தொடர்ந்து போலீ​ஸார் நடத்​திய என்​க​வுன்ட்​டரில் ரோகித் ஆர்யா குண்​டு​கள் பாய்ந்து சரிந்து விழுந்​தார். உடனடி​யாக அவர் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். அவர் ஏற்​கெனவே உயி​ரிழந்​து​விட்​ட​தாக மருத்​து​
வர்​கள் தெரி​வித்​தனர். ஆர்​.ஏ. ஸ்டூடியோ​வில் பிணைக்​கை​தி​களாக பரித​வித்த 17 சிறு​வர், சிறுமியரும் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டனர்.

இதுகுறித்து மும்பை போலீ​ஸார் கூறும்​போது, “இயக்​குநர் என்று கூறிவந்த ரோகித் ஆர்யா மனநலம் பாதிக்​கப்​பட்​ட​வர் போன்று தெரி​கிறது. கடன் தொல்​லை​யில் சிக்​கி​யிருப்​ப​தாக​வும் கூறப்​படு​கிறது. அவர் விபரீத​மாக முடிவு எடுப்​ப​தற்கு முன்​பாக கழி​வறை ஜன்​னலை உடைத்து நுழைந்து என்​க​வுன்ட்​டர் நடத்தி சிறு​வர், சிறுமியரை மீட்​டோம். இவர்​கள் 13 வயது முதல் 17 வயதுக்கு உட்​பட்​ட​வர்​கள். ஒரு மு​தி​ய​வர், ஓர் இளைஞரும் மீட்​கப்​பட்​டனர். ஆர்.ஏ. ஸ்டூடியோ​வில் இருந்து ஒரு துப்​பாக்​கி, ரசாயன பொருட்​கள் கைப்​பற்​றப்​பட்​டன” என்​றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.