இந்திய கம்யூனிஸ்டை ஏமாற்றுகிறது மார்க்சிஸ்ட்: காங்கிரஸ் மூத்த தலைவர் விமர்சனம் 

கொச்சி: கேரளா​வில் மார்க்​சிஸ்ட் தலை​மையி​லான இடது ஜனநாயக முன்​னணி ஆட்சி நடத்தி வரு​கிறது. அங்கு மத்​திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்​டத்தை அமல்​படுத்த மாநில அரசு அண்​மை​யில் ஒப்​புதல் அளித்​தது.

ஆனால் கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றிருக்​கும் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி, பிஎம் ஸ்ரீ திட்​டத்​துக்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​தது. இதையடுத்து, கேரள அமைச்​சரவை கூட்​டம் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. அ​தில் பிஎம் திட்​டத்​தில் இணைவது குறித்து ஆய்வு செய்ய கல்வி அமைச்​சர் சிவன் குட்டி தலை​மை​யில் அமைச்​சர்​கள் அடங்​கிய 7 பேர் குழு அமைக்க முடிவு செய்​யப்​பட்​டது.

இதுதொடர்​பாக கேரள காங்​கிரஸ் மூத்த தலை​வர் சதீசன் கூறும்போது, “இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சியை மார்க்​சிஸ்ட் கூட்​டணி அரசு ஏமாற்​றுகிறது. ஆளும் கூட்​டணி அரசு பிஎம் ஸ்ரீ திட்​டம் தொடர்பான புரிந்​துணர்வு ஒப்​பந்​தத்​தில் தன்னிச்சையாக கையெழுத்​திட்​டிருக்​கக் கூடாது. அமைச்​சர்​கள் குழுவை முன்​கூட்​டியே நியமித்​திருக்க வேண்​டும்​” என்றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.