கேரள திருமணத்தில் டிஜிட்டல் முறையில் மொய் வசூல்!

திருவனந்தபுரம்: கேரளா​வில் நடை​பெற்ற திரு​மணம் ஒன்​றில் மணமகளின் தந்​தை, தனது சட்​டைப் பையில் ஒட்​டப்​பட்ட க்யூ ஆர் கோடு மூலம் மொய் வசூல் செய்த வீடியோ வைரலாக பரவி​யுள்​ளது.

திருமண நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​கும் விருந்​தினர்​கள் மணமக்​களை ஆசீர்​வ​தித்து மொய் பணம் வழங்​கு​வது நாடு முழு​வதும் பின்​பற்​றப்​படும் வழக்​கம். சிலர் பரிசு பொருட்​களை அன்​பளிப்​பாக வழங்​கு​வர்.

தற்​போது பெரும்​பாலான மக்​கள் டிஜிட்​டல் முறை​யில் பணம் செலுத்​து​வ​தால், திருமண நிகழ்ச்​சிகளுக்கு செல்​லும் போது மொய் பணத்தை எடுத்​துச் செல்​வது பலருக்கு சிரம​மாக உள்​ளது.

மொய் பணத்தை பெறு​வ​தி​லும், அதை கணக்​கிடு​வதும் திருமண வீட்​டாருக்​கும் சிரம​மாக உள்​ளது. இதை கருத்​தில் கொண்டு திரு​மணத்​துக்கு வரும் விருந்​தினர்​கள் எளி​தில் மொய் பணத்தை செலுத்​து​வதற்​காக மணமகளின் தந்தை க்யூ ஆர் கோர்டை தனது சட்டை பையில் ஒட்​டி​யிருந்​தார். திரு​மணத்​துக்கு வந்த விருந்​தினர்​களும் அதை ஸ்கேன் செய்து பணம் செலுத்​தினர். இந்த வீடியோ சமூக ஊடகத்​தில் வைரலானது.

இது குறித்து பலரும் பலவித​மாக கருத்து தெரி​வித்​தனர். சிலர் இந்த டிஜிட்​டல் முயற்​சியை பாாரட்​டினர். சிலர் இதை விமர்​சன​மும் செய்​தனர். சிலர் கிண்​டல் அடித்​திருந்​தனர்.

இந்த திரு​மணத்​துக்கு சென்ற ஒரு​வர் பதி​விட்ட கருத்​தில், திருமண வீட்​டில் நகைச்​சுவைக்​காக மணமகளின் மாமா இது போல் செய்​த​தாக​வும், சில குடும்ப உறுப்​பினர்​கள் மட்​டுமே அதில் பணம் செலுத்​தி​ய​தாக தெரி​வித்​துள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.