சபரிமலை கோயில் தங்கம் திருட்டு: பிரதமர் தலையிடக் கோரி 1 கோடி கையெழுத்து இயக்கம்

கோழிக்கோடு: சபரிமலை தங்​கம் திருட்டு விவ​காரத்​தில் பிரதமர் தலை​யிடக் கோரி மிகப் பெரிய கையெழுத்து பிரச்​சா​ரத்தை தொடங்​க​வுள்​ள​தாக பாஜக பொதுச் செய​லா​ளர் ரமேஷ் கூறி​யுள்​ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: சபரிமலை​ ஐயப்பன் கோயில் தங்​கம் திருட்டு விவ​காரத்​தில் மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் தலை​மையக​மான ஏகேஜி மையத்​துக்கு தொடர்பு உள்​ளது. சபரிமலை கோயி​லின் கதவில் இருந்து தங்​கம் திருடப்​பட்ட விவ​காரம் ஒரு நபருடன் மட்​டும் தொடர்​புடைய​தாக இருக்க முடி​யாது எனவும், இதில் சர்​வ​தேச அளவில் முறை​கேடு நடை​பெற்று இருக்​கலாம் என்ற சந்​தேகம் உள்​ள​தாக கேரள உயர்​ நீ​தி​மன்​றமே தெரி​வித்​துள்​ளது.

இதில் மிகப் பெரிய சதி நடை​பெற்​றுள்​ளது. திரு​வாங்​கூர் தேவசம் வாரிய அதி​காரி​களுக்கு மட்​டும் இதில் தொடர்பு இல்​லை. அரசு தலை​யீடும் உள்​ளது. மார்க்​சிஸ்ட் கட்​சி​யால் நியமிக்​கப்​பட்ட தேவசம் வாரி​யத்​தின் முன்​னாள் ஆணை​யர் பாது​காக்​கப்​படு​கிறார். அவரை ஏன் கைது செய்​ய​வில்​லை. முக்​கிய சதி​காரர்​களை பாது​காக்க, முன்​னாள் ஆணை​யரை கைது செய்​வது தவிர்க்​கப்​படு​கிறது.

இந்த விவ​காரத்தை விசா​ரிக்​கும் சிறப்பு புல​னாய்வு குழு மாநில அரசின் கீழ் செயல்​படு​கிறது. எனவே இதுகுறித்து சிபிஐ விசா​ரணை நடத்த வேண்​டும். கோயில் பாது​காப்பை உறுதி செய்ய மத்​திய அரசு தலை​யிட வேண்​டும். இதற்​காக நாங்​கள் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று அதை பிரதமரிடம் சமர்ப்​பிப்​போம். இவ்​வாறு ரமேஷ் தெரி​வித்​தா​ர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.