அந்தமான் கடலில் கடுமையான நிலநடுக்கம்

போர்ட் பிளேர்,

அந்தமான் கடலில் இன்று மதியம் 12.06 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது. இதனால், அந்தமான் நிகோபார் தீவுகளின் சில பகுதிகளில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.

அது 90 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.