மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த அதிராம்பட்டினம் முஸ்லிம்கள் மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு 

மதுரை: தஞ்​சாவூர் மாவட்​டம் அதி​ராம்​பட்​டினத்​தில் மத்​திய அரசுக்கு எதி​ராக ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்ட முஸ்​லிம்​கள் மீது போலீ​ஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்​து, உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டது.

அதி​ராம்​பட்​டினத்​தைச் சேர்ந்த சாஜி​தா, பாத்​தி​மா, இப்​ராஹீம் உள்​ளிட்​டோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: முஸ்​லிம் தலை​வர்​கள், இயக்​கத்​தினர் ஆகியோர் மீதான மத்​திய அரசின் கைது நடவடிக்​கை​யைக் கண்​டித்​து, அதி​ராம்​பட்​டினம் பேருந்து நிலை​யம் அருகே அமை​தி​யான முறை​யில் கவன ஈர்ப்பு ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டோம்.

ஆனால், கிராம நிர்​வாக அலு​வலர் சந்​தோஷ்கு​மார் அளித்த புகாரில், ஆர்ப்​பாட்​டத்​தில் முஸ்​லிம் இயக்க கட்​சிகளின் தலை​வர்​கள் மற்​றும் முஸ்​லிம்​கள் ஏராள​மானோர் கலந்​து​கொண்​டனர் என்​றும், இந்த ஆர்ப்​பாட்​டத்​தால் போக்​கு​வரத்​துக்​கும், பொது​மக்​களுக்கும் இடையூறு ஏற்​பட்​ட​தாக​வும் தெரி​வித்​துள்​ளார். இதனால், 304 பேர் மீது அதி​ராம்​பட்​டினம் காவல் நிலை​யத்​தில் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்​ய​வேண்​டும். இவ்​வாறு மனு​வில் தெரி​வித்​திருந்​தனர். இந்த மனுவை விசா​ரித்த நீதிபதி சுந்​தர்​மோகன், அனை​வர் மீதும் பதி​யப்​பட்​ட வழக்​கை ரத்​து செய்​து உத்​தரவிட்​டார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.