ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பர விவகாரம்: மன்னிப்பு கோரினார் நடிகர் பிரகாஷ் ராஜ்

ஹைதராபாத்: ஆன்​லைன் சூதாட்ட செயலி விளம்​பரத்​தில் நடித்த நடிகர் பிர​காஷ் ராஜ், ரானா, விஜய் தேவர​கொண்​டா, மஞ்சு லட்​சுமி உட்பட 29 பேருக்கு ஹைத​ரா​பாத் சிஐடி சிறப்பு விசா​ரணை குழு, நோட்​டீஸ் அனுப்பி ஒவ்​வொரு​வராக விசா​ரணைக்கு அழைத்து விளக்​கம் கேட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், நேற்று நடிகர் பிர​காஷ் ராஜ் இந்த விவ​காரம் தொடர்​பாக சிஐடி அலு​வல​கத்​தில் ஆஜராகி, அவர்​கள் கேட்ட கேள்வி​களுக்கு விளக்​கம் அளித்​தார்​.மேலும், சில வங்கி கணக்கு விவரங்களை​யும் அவர் சிறப்பு விசா​ரணை குழு​விடம் சமர்​பித்​தார்.

விசா​ரணை நடந்து முடிந்த பின்​னர் பிர​காஷ்​ராஜ் செய்​தி​யாளர்​களிடம் பேசி​ய​தாவது: 2016-ல் நான் ஒரு செயலிக்கு பிரமோஷன் செய்​தேன். அந்த செயலி 2017-ல் ஆன்​லைன் சூதாட்ட செயலி​யாக மாற்​றப்​பட்​டது. இதனை அறிந்து அந்த ஒப்​பந்​தத்தை நான் ரத்து செய்து கொண்​டேன். தெரிந்து செய்​தா​லும், தெரி​யாமல் செய்​தா​லும் தவறு, தவறு​தான் என்​ப​தால் இது தொடர்​பாக பொது​மக்​களிடம் நான் மன்​னிப்பு கோரு​கிறேன். இவ்வாறு பிர​காஷ் ராஜ் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.