
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் நேற்று பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக, தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப் பகுதிக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது.
இதுமேற்கு, வடமேற்கில் தமிழகம் நோக்கி நகர்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகரில் நேற்று பரவலாக மழைபெய்தது. சென்னையைப் பொருத்தவரை, பல இடங்களில் நேற்று முன்தினம் இரவுமுதல் விட்டுவிட்டு மிதமானமழை பெய்தது.