சென்னை: நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தென்காசியின் 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தென்காசியின் 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைப்பு நீண்டகால போராட்டத்தின் முடிவில், நீதிமன்ற உத்தரவை அடுத்து, தென்காசி மாவட்டத்தின் 12 ஊராட்சிகளைத் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைத்து அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இந்த 12 ஊராட்சிகளும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இலாமிரசலையும், கீழக்கலிங்கப்பட்டி போன்ற கிராமங்கள் இந்த இணைப்பில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.