
விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுகதான் போட்டியிடும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
விருதுநகரில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்துப் பேசியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை பார்த்து திமுக பதற்றப்படுகிறது. திமுகவினர் போலி வாக்காளர்களை நம்பி தான் தேர்தலில் நிற்க முடியும்.