IPL 2026 Mini Auction, Maximum Fee Rule: ஐபிஎல் தொடரில் இரண்டு விதமான ஏலம் நடைபெறும். மூன்று சீசன்களுக்கு ஒருமுறை மெகா ஏலமும், ஒவ்வொரு சீசனுக்கு இடையே மினி ஏலமும் நடத்தப்படும். தற்போது ஐபிஎல் 2026 சீசனுக்கு முன் மினி ஏலம் நடைபெற இருக்கிறது.
Add Zee News as a Preferred Source
IPL 2026 Mini Auction: மினி ஏலத்தில் கோடிகள் கொட்டும்
மினி ஏலம் என்றாலே வீரர்கள், அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வந்தது. குறிப்பாக, வெளிநாட்டு வீரர்களுக்கு டிமாண்ட் அதிகம் இருக்கும், ஆனால் ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களோ குறைவாகவே இருப்பார்கள். இதனால்தான் வெளிநாட்டு வீரர்கள் அதிக தொகைக்கு எடுக்கப்பட்டு வந்தார்கள். இதை மனதில் வைத்து பல வெளிநாட்டு வீரர்களும் மெகா ஏலத்தில் பதிவு செய்யாமல், மினி ஏலத்தில் நேரடியாக வந்து பதிவு செய்வார்கள். அதன்மூலம் அதிக தொகையையும் சம்பாதித்தார்கள்.
உதாரணத்திற்கு 2024 மினி ஏலத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆஸ்திரேலிய வீரர்களான பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் அந்த மினி ஏலத்தில்தான் நேரடியாக பதிவு செய்தனர். அந்த ஏலத்தில் கேகேஆர் அணி ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கும், எஸ்ஆர்ஹெச் அணி பாட் கம்மின்ஸை ரூ.20.5 கோடிக்கும் எடுத்தது. பிரத்யேகமாக இந்திய வீரர்களுக்கான ஐபிஎல் தொடரை, வெளிநாட்டு வீரர்கள் தொடர்ந்து பயன்படுத்தி லாபம் பார்த்தார்கள். 2023இல் சாம் கர்ரன் ரூ.18.5 கோடி, கேம்ரூன் கிரீன் ரூ.17.5 கோடி வரை ஏலம் போனார்கள்.
IPL 2026 Mini Auction: முட்டுக்கட்டை போட்ட ஐபிஎல் விதி
இந்த போக்குக்கு முடிவு கட்டும் விதமாக, கடந்த ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்களுக்கு பல கட்டுபாடுகள் கொண்டுவரப்பட்டன. அதில் முக்கியமானவை என்றால், மெகா ஏலத்தில் பதிவு செய்த வீரர்களால் மட்டுமே அடுத்த இரண்டு ஆண்டுகள் நடைபெறும் மினி ஏலத்தில் பதிவு செய்ய இயலும். ஒருவேளை மெகா ஏலத்தில் பதிவு செய்யாவிட்டால், அடுத்த மெகா ஏலத்தில்தான் அவர் பதிவு செய்ய வேண்டும். இது மினி ஏலத்திற்கு மட்டும் வரும் வெளிநாட்டு வீரர்களுக்கு முட்டுக்கட்டைப் போட்டது.
IPL 2026 Mini Auction: கேம்ரூன் கிரீனுக்கு இருக்கும் டிமாண்ட்
அதேநேரத்தில், கடந்த 2025 மெகா ஏலத்தில் பதிவு செய்து காயம் காரணமாக ஏலத்தில் பங்கேற்காத கேம்ரூன் கிரீன் தற்போது மினி ஏலத்திற்கு வந்துள்ளார். தற்போது ரூ.2 கோடி அடிப்படை தொகை பிரிவில் பதிவு செய்திருக்கிறார். கேகேஆர் அணி ரூ.64.3 கோடியுடனும், சிஎஸ்கே ரூ.43.4 கோடியுடனும் மினி ஏலத்திற்கு வந்துள்ளது. ஆன்ட்ரே ரஸ்ஸல் ஓய்வு அறிவிப்பு, கிளென் மேக்ஸ்வெல் மினி ஏலத்தை தவறவிட்டது போன்ற காரணங்கள் கேம்ரூன் கிரீன் மீதான டிமாண்டை இரட்டிப்பாக்கி உள்ளது.
Maximum Fee Rule: ஐபிஎல் தொடரின் புதிய விதி
கேகேஆர், சிஎஸ்கே இரு அணிகளும் கேம்ரூன் கிரீனை கொக்கிப்போட்டு தூக்க காத்திருக்கிறது. இதனால், கேம்ரூன் கிரீன் நிச்சயம் ரூ.30 கோடி வரை ஏலம் போவார் என கூறப்படுகிறது. ஆனால், ஐபிஎல் தொடரில் கடந்தாண்டு கொண்டுவரப்பட்ட புதிய ‘Maximum Fee’விதியின்கீழ், அவர் ரூ.30 கோடிக்கு ஏலம் போனாலும் கூட, அவருக்கு ரூ.18 கோடி மட்டுமே கொடுக்கப்படும். மீதமுள்ள ரூ.12 கோடி பிசிசிஐயிடம் உள்நாட்டு வீரர்களின் நலனுக்காக ஒப்படைக்கப்படும் என புதிய விதி கூறுகிறது.
புதிய விதியில் “மினி ஏலத்தில் எந்தவொரு வெளிநாட்டு வீரரின் ஏலத் தொகையும், அதிகபட்ச தக்கவைப்பு விலையான (ரூ.18 கோடி) மற்றும் மெகா ஏலத்தில் அதிகபட்ச ஏல விலையை விடக் குறைவாகவே இருக்கும். மெகா ஏலத்தில் அதிகபட்ச ஏல விலை ரூ.20 கோடியாக இருந்தால், ரூ.18 கோடி உச்ச வரம்பாக இருக்கும். மெகா ஏலத்தில் அதிகபட்ச ஏலத் தொகை ரூ.16 கோடியாக இருந்தால், அந்த உச்ச வரம்பாக ரூ.16 கோடி இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cameron Green: கேம்ரூன் கிரீனுக்கு இவ்வளவு தான் கிடைக்கும்?
இதனால், கேம்ரூன் கிரீன் எவ்வளவு தொகைக்கு போனாலும் அவருக்கு கையில் கிடைக்கப்போவது ரூ.18 கோடிதான். அதேநேரத்தில், கிரீனை ரூ.30 கோடிக்கு ஒரு அணி எடுத்தால் அந்த அணியின் பர்ஸ் தொகையில் இருந்து மொத்த ரூ.30 கோடியும் வசூலிக்கப்படும். இதில் ரூ.18 கோடி கிரீனுக்கும், ரூ.12 கோடி பிசிசிஐக்கும் ஒப்படைக்கும். மேலும் இந்த விதி வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே, இந்திய வீரர்களுக்கு கிடையாது. மேலும் இது எப்போதும் ரூ.18 கோடியாக இருக்காது, கடந்த மெகா ஏலத்தில் அதிகபட்ச தக்கவைப்பு தொகை ரூ.18 என்பதால், இந்தாண்டு உச்ச வரம்பு தொகை ரூ.18 கோடி ஆகும்.
மேலும் படிக்க | சில நாட்களில் ஐபிஎல் ஏலம்! திடீர் என ஓய்வை அறிவித்த சிஎஸ்கே முன்னாள் வீரர்!
மேலும் படிக்க | CSK உற்று நோக்கும் இந்த 20 வயது வீரர்… ஜடேஜாவுக்கு சரியான மாற்று கிடைச்சாச்சு…!
மேலும் படிக்க | ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் அதிக விலை போக வாய்ப்புள்ள 5 வெளிநாட்டு வீரர்கள் யார்? -விவரம்
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More