சென்னை: சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், கூட்டணிக் கட்சிகள் குறித்து முடிவெடுக்க இபிஎஸ்சுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில், அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணியளவில் சென்னை வானகரத்தில் உள்ள ஶ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் உடல்நலம் பாதிப்பு காரணமாக கலந்துகொள்ளாத நிலையில், மூத்த உறுப்பினர் கே.பி.முனுசாமி தற்காலிக […]