3வது டி20: இலங்கை அணியை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா

திருவனந்தபுரம்,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி தடுமாறியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ஹசினி பெரேரா 25 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட் , தீப்தி சர்மா 3 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 113 ரன்கள் இலக்குடன் விளையாடிய இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா 1 ரன்களும், ஜெமிமா 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஷபாலி வர்மா, ஹர்மன்பிரீத் கவுர் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட ஷபாலி வர்மா அரைசதமடித்தார். அவர் 79 ரன்கள் எடுத்தார்.இறுதியில் 13.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என இந்திய அணி கைப்பற்றியது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.