நியூசிலாந்து தொடரில் விளையாடும் ருதுராஜ்? இந்த முக்கிய வீரர் நீக்கம்?

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த போதிலும், காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஸ்ரேயஸ் ஐயர் அணிக்கு திரும்பி உள்ளதால் ருதுராஜ் வெளியேற்றப்பட்டுள்ளார். இருப்பினும், ருதுராஜ் நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் முழு உடற்தகுதிக்கான தகுதி சான்றிதழ் பெறவில்லை என்றால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம்.

Add Zee News as a Preferred Source

ருதுராஜ் பேட்டிங்

ஷுப்மன் கில்ன் காயத்திற்கு பிறகு ருதுராஜ் கடந்த தொடரில் ஒருநாள் அணிக்கு திரும்பினார், ஆனால் ஓப்பனராக விளையாட இடம் கிடைக்காததால் ஷ்ரேயாஸ் ஐயரின் நான்காம் இடத்தில் விளையாட வைக்கப்பட்டார். முதல் ஒருநாள் போட்டியில் 8 ரன்கள் மட்டுமே அடித்தாலும், இரண்டாவது போட்டியில் அவர் தனது திறமையை நிரூபித்தார். 83 பந்துகளில் 105 ரன்கள் அடித்து தனது முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். அந்த போட்டியில் விராட் கோலியுடன் மூன்றாவது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்தார். இந்தியா 358/5 என்ற ஸ்கோரை பதிவு செய்ததில் அவரது பங்களிப்பு முக்கியமானது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் ருதுராஜ் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. விஜய் ஹசாரே கோப்பையில் உத்தரகாண்டுக்கு எதிராக 124 ரன்களும், மும்பைக்கு எதிராக 66 ரன்களும் அடித்தார். இந்த சிறப்பான பார்மில் இருந்தபோதும் அவர் நீக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஸ்ரேயஸ் ஐயர் வருகை 

கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணை கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் காயத்தில் இருந்து அணிக்கு திரும்பியுள்ளனர். அக்டோபர் 25 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது காயம் அடைந்த ஐயர், அதன் பிறகு விளையாடவில்லை. டிசம்பர் 25 முதல் BCCIயின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் பயிற்சி பெற்று வருகிறார். BCCIயின் வீரர்கள் அறிவிப்பில், “ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவது நிபந்தனைகளுக்கு உட்பட்டது. BCCI CoE தகுதி சான்றிதழ் பெற்றால் மட்டுமே அவர் விளையாட முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ருதுராஜ்க்கு நம்பிக்கையை அளிக்கும் விஷயம் ஆகும்.

ஜனவரி 2 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு முக்கிய பயிற்சிகளில் பங்கேற்க ஐயர் திட்டமிட்டுள்ளார். இந்த பயிற்சிகளில் வெற்றிகரமாக செயல்பட்டால் மட்டுமே ஒருநாள் அணியில் விளையாட அவருக்கு அனுமதி கிடைக்கும். அடுத்ததாக ஜனவரி 6 அன்று விஜய் ஹசாரே கோப்பையில் மும்பை அணிக்காக விளையாட ஐயர் திட்டமிட்டுள்ளார். இது அவரது பிட்னஸை நிரூபிக்க முக்கிய வாய்ப்பாகும். 

ருதுராஜ்-க்கு வாய்ப்பு எப்படி?

ஷ்ரேயாஸ் ஐயர் முழு தகுதியை நிரூபிக்கவில்லை என்றால், தேர்வாளர்கள் மாற்று வீரரை அழைக்க வேண்டும். இந்த சூழலில், ருதுராஜ் தானாகவே ஐயரின் மாற்றாக இருப்பார். அவர் ஏற்கனவே அணியில் இடம் பெற்றிருந்ததால், விஜய் ஹசாரே கோப்பையில் சிறப்பாக விளையாடி வருவதால், முதல் தேர்வாக இருப்பார். ஐயர் தனது தகுதியை நிரூபித்து திரும்புவார் என்று அணி நிர்வாகம் நம்புகிறது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு முன்பு ஒருநாள் அணியின் துணை கேப்டனாக பெயரிடப்பட்ட ஐயர், தற்போது மீண்டும் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியா-நியூசிலாந்து ஒருநாள் போட்டிகள் ஜனவரி 11, 14, 18 ஆகிய தேதிகளில் வடோதரா, ராஜ்கோட், இந்தூரில் நடைபெறும். 

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.