ரூ.11 கோடி வீண் போகல… கம்பேக் கொடுக்கும் வேகப்புயல் – முரட்டு குஷியில் ரிஷப் பண்ட்

IPL 2026, Mayank Yadav Comeback: ஐபிஎல் 2026 தொடர் தொடங்குவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. அதற்கு முன் தற்போது பல டி20 தொடர்கள் நடைபெற்று வருகின்றன. ILT20 தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. SA20 தொடர் நடைபெற்று வருகிறது. அதுபோல், உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடரும் தற்போது நடைபெற்று வருகிறது. 

Add Zee News as a Preferred Source

இதனால் ஒவ்வொரு ஐபிஎல் அணி ரசிகர்களும் தங்கள் அணிக்கு தேர்வாகி உள்ள வீரர்கள் யார் யார் சிறப்பான பார்மில் இருக்கிறார்களா? யார் யார் சொதப்புகிறார்கள்? என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். அதேபோல், தங்கள் அணியின் முக்கிய வீரர் யாராவது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார்கள் என்றால் அவர்கள் குறித்த அப்டேட்டுக்கும் காத்திருப்பார்கள். ஷ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியது பஞ்சாப் கிங்ஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Mayank Yadav Comeback: 150 கி.மீ., பந்துவீசக்கூடியவர்

அதேபோல், தற்போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக புதிய தகவல் ஒன்று வந்துள்ளது. மணிக்கு 150 கி.மீ., வேகத்தில் பந்துவீசக்கூடிய இந்திய வீரர் காயத்தில் இருந்து மீண்டு, மீண்டும் பந்துவீச தயாராகி உள்ளார். ஆம், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் இளம் வீரர் மயங்க் யாதவ் ஐபிஎல் போட்டிகளில் விளையாட முழுமையாக தயாராகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிவேகமாக பந்துவீசுவதால் இவர் அடிக்கடி காயத்தில் சிக்குவது வழக்கமாகிவிட்டது. இவர் கடந்த 12 மாதங்களில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். 2021ஆம் ஆண்டில் இருந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடியிருக்கும் இவர் வெறும் 37 போட்டிகளில் மட்டுமே இதுவரை விளையாடி உள்ளார். அதில் 6 ஐபிஎல் போட்டிகளும், இந்திய அணிக்காக 3 டி20ஐ போட்டிகளும் அடக்கம்.

Mayank Yadav Comeback: அறுவை சிகிச்சை

இவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கடந்த 2025 மெகா ஏலத்திற்கு முன் ரூ.11 கோடிக்கு தக்கவைத்து. தற்போது மீண்டும் 2026 சீசனில் அவரை தக்கவைத்துள்ளது. கடந்தாண்டு 2 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டையும், 2024 சீசனில் 4 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டையும் அவர் வீழ்த்தியிருந்தார். காயம் காரணமாக கடந்தாண்டு அவரால் முழுமையாக விளையாட முடியவில்லை. கடந்த ஜூன் மாதம் முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதில் இருந்து முழுமையாக குணமடைய 6-8 மாதங்களாகும் என கூறப்பட்டது. தற்போது அவர் உடற்தகுதியை மீண்டும் பெற்று வருகிறார்.

Mayank Yadav Comeback: ரஞ்சிக் கோப்பையில் கம்பேக்

மயங்க் யாதவ் தற்போது பெங்களூருவில் உள்ள பிசிசிஐயின் சிறப்பு மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார். இவர் வரும் ஜனவரி 22ஆம் தேதி தொடங்கும் ரஞ்சி கோப்பை தொடர்களில் விளையாட தற்போது திட்டமிட்டு பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. வாரத்திற்கு 18 ஓவர்கள் மட்டுமே போட வேண்டும் என அவரது வேலைப்பளூவும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “மயங்க் யாதவ் காயத்தில் இருந்து நன்றாக மீண்டு வருகிறார். மேலும் வாரத்திற்கு 18 ஓவர்கள் என்ற கணக்கில் 90 சதவீத தீவிரத்தில் பந்துவீச்சை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார். அவர் ஸ்ட்ரென்த் மற்றும் கண்டிஷனிங்கிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். இதனால் வேகப்பந்து வீச்சுக்குத் தேவையான அதிகபட்ச உடற்தகுதி நிலையை அடைய முடியும்” என்றார்.

Mayank Yadav Comeback: டெல்லி vs சத்தீஸ்கர்

மேலும் அந்த அதிகாரி, “அடுத்தடுத்த வாரங்களில், அவர் 100 சதவீத தீவிரத்தில் பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன் அதி தீவிர ஃபீல்டிங் பயிற்சிகளின் ஒருங்கிணைப்பும், தொடர்ச்சியான சகிப்புத்தன்மை மற்றும் அறிகுறிகள் கண்காணிப்புக்கு உட்பட்டது” என்றார். டெல்லி அணி வீரரான மயங்க் யாதவ் கடைசியாக 2023ஆம் ஆண்டு டிசம்பரில் உள்நாட்டு போட்டியை விளையாடினார். தற்போது 2026ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி டெல்லி அணி, சத்தீஸ்கரை சந்திக்கிறது. அன்று மயங்க் யாதவ் டெல்லி அணிக்காக விளையாடுவார் என நம்பப்படுகிறது.

Mayank Yadav Comeback: இந்திய அணிக்கும் பலம்

ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு இது மிக பெரும் நம்பிக்கை அளிக்கும். சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை கொண்ட அணியாக லக்னோ திகழ்கிறது. மேலும் தற்போது பந்துவீச்சு ஆலோசகராக பரத் அருணும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளரான பரத் அருணின் கீழ், மயங்க் யாதவ் பயிற்சி பெற்றால் நிச்சயம் அது லக்னோ அணிக்கு மட்டுமின்றி இந்திய அணிக்கே பெரும் பலத்தை கொடுக்கும்.

மேலும் படிக்க | IPL 2026: LSG-ல் 9 பாஸ்ட் பவுலர்கள்.. லக்னோவின் பெஸ்ட் பிளேயிங் 11 இதுதான்!

மேலும் படிக்க | CSK வீரரை வாங்க துடித்த ரிஷப் பண்ட்.. யார் தெரியுமா? சுவாரஸ்யம் பகிர்ந்த LSG ஓனர்!

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.