India vs New Zealand 3rd ODI, Playing XI Changes: வரும் பிப்ரவரி 7ஆம் தேதி ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் தொடங்க உள்ளது. வரும் மார்ச் 8ஆம் தேதிவரை இத்தொடர் நடைபெற இருக்கிறது.
Add Zee News as a Preferred Source
India vs New Zealand 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்?
ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் நியூசிலாந்து அணி தற்போது இந்தியாவில் மூன்று போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடர், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடுகின்றன. தற்போது ஓடிஐ தொடர் நடைபெற்று வருகிறது. வதோதரா நகரில் நடந்த முதல் ஓடிஐ போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்திலும், ராஜ்கோட் நகரில் நடந்த 2வது ஓடிஐ போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
இதனால், ஓடிஐ தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்தூர் நகரில் வரும் ஜனவரி 18ஆம் தேதி (ஞாயிறு) அன்று நடைபெற இருக்கும் 3வது ஓடிஐ போட்டியில் வெற்றிபெறும் அணியே தொடரை கைப்பற்றும். நியூசிலாந்து அணி இதற்கு முன் இந்திய மண்ணில் ஒருமுறை கூட ஓடிஐ தொடரை வென்றதில்லை. இதுவரை இரு அணிகளும் இணைந்து 7 ஓடிஐ தொடர்களை இந்திய மண்ணில் விளையாடி, 7 தொடர்களையும் இந்திய அணியே வென்றுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டில் இந்தியாவை டெஸ்டில் வைட்வாஷ் செய்து சாதனை வெற்றி பெற்றதை போல், தற்போது ஓடிஐ தொடரிலே அதேபோல் சாதனை வெற்றி படைக்க மைக்கெல் பிரேஸ்வெல் தலைமையிலான நியூசிலாந்து கடுமையாக முயற்சிக்கும்.
India vs New Zealand 3rd ODI: பிளேயிங் லெவனில் மாற்றம் வருமா?
அந்த அணியின் காம்பினேஷன் தற்போது சிறப்பாக இருக்கிறது. எனவே, அவர் மூன்றாவது ஓடிஐ போட்டிக்கு காயம் ஏதும் யாருக்கும ஏற்படாவிட்டால், நிச்சயம் அதே பிளேயிங் லெவனுடன்தான் களமிறங்குவார்கள் எனலாம். ஆனால் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. அதில் இருந்து மீண்டு வர இந்திய அணி சில ஓட்டைகளை அடைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்த ஓட்டைகள் என்னென்ன? 3வது போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவனில் என்ன மாற்றத்தைச் செய்தால் வெற்றி வசப்படும்? என்பதை இங்கு காணலாம்.
India vs New Zealand 3rd ODI: இந்திய அணியின் பிளேயிங் லெவன்
இந்திய அணிக்கு டாப் ஆர்டர் பேட்டிங்தான் பெரும் பலமே. கில், ரோஹித், விராட், ஷ்ரேயாஸ், கேஎல் ராகுல் ஆகியோர்தான் இந்திய அணியின் பேட்டிங்கில் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருக்கிறார். ஓடிஐ பேட்டர்கள் தரவரிசைப் பட்டியலில் முதல் 11 வீரர்களில் இந்த 5 இந்திய வீரர்களுமே இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு பிறகு 100வது இடத்தில்தான் அக்சர் பட்டேல் இருக்கிறார் இதன்மூலமே, இந்திய அணி பேட்டிங் எந்தளவிற்கு பலம் என நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஜடேஜா சுழற்பந்துவீச்சில் ஓரளவு சமாளிக்கிறார், அவர் பேட்டிங்கிலும் கைக்கொடுக்க வேண்டும். குல்தீப் யாதவ் நிச்சயம் பிளேயிங் லெவனில் விளையாடுவார். வாஷிங்டன் சுந்தர் இல்லாவிட்டாலும் ஆயுஷ் பதோனியை அணியில் எடுத்தே ஆக வேண்டும் என நிலை தற்போது இல்லை. ஒருவேளை ஆயுஷ் பதோனிக்கு ஆடுகளத்தை பொருத்து வாய்ப்பு வழங்கப்படலாம்.
India vs New Zealand 3rd ODI: பிளேயிங் லெவனில் அர்ஷ்தீப் சிங்
வேகப்பந்துவீச்சுதான் இந்திய அணி ஓட்டைகளில் பெரிதாகும். முகமது சிராஜ் – ஹர்ஷித் ராணா ஆகியோர் ஓபனிங் பந்துவீச்சை கவனித்துக்கொண்டனர். பிரசித் கிருஷ்ணா மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக உள்ளார். கடந்த போட்டியில் நிதிஷ் குமார் யாதவ் 2 ஓவர்களை வீசினார். இதில் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதில் அர்ஷ்தீப் சிங்கை பிளேயிங் லெவனில் கொண்டுவர வாய்ப்புள்ளது. இதன்மூலம், முகமது சிராஜ் – அர்ஷ்தீப் சிங் ஆகியோர் முதல் பவர்பிளேவிலும், கடைசி பவர்பிளேவிலும் பந்துவீச்சை கவனித்துக்கொள்வார்கள். மிடில் ஓவர்களில் ஹர்ஷித் ராணா பந்துவீச வேண்டும். நிதிஷ் குமாரை 3-4 ஓவர்கள் வீசவைக்கலாம்.
India vs New Zealand 3rd ODI: ஏன் பிரசித் கிருஷ்ணா வேண்டாம்?
பிரசித் கிருஷ்ணா இரண்டு இன்னிங்ஸில் 3 விக்கெட்டை கைப்பற்றியிருந்தாலும் கூட அவரிடம் சீரான ரிதம் இல்லை. ஹர்ஷித் ராணா தொடர்ச்சியாக நல்ல வேகத்தில் வீசுகிறார், அதுமட்டுமின்றி ஹர்ஷித் ராணா நம்பர் 8இல் நல்ல பேட்டிங் ஆப்ஷனாகவும் இருக்கிறார். எனவே, குல்தீப் யாதவ் போன்று அட்டாக்கிங் பந்துவீச்சை மேற்கொள்ள அர்ஷ்தீப் சிங்கை இந்திய அணி பிளேயிங் லெவனில் எடுத்தால் ஆபத்து காலகட்டத்தில் நிச்சயம் கைக்கொடுப்பார். பந்தை ஸ்விங் செய்வதிலும், ரிவர்ஸ் ஸ்விங் செய்வதிலும் அர்ஷ்தீப் சிங் திறன் பெற்றவர் என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது.
மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பையில் வாஷிங்டன் சுந்தர் சந்தேகம்… இந்த 3 வீரர்களில் ஒருவருக்கு வாய்ப்பு!
மேலும் படிக்க | IND vs NZ: ராஜ் கோட்டில் இந்திய அணி தோல்விக்கு முக்கிய காரணம் இதுதான்! கோச் ஓபன் டாக்
மேலும் படிக்க | இந்திய அணிக்கு சவுக்கடி… நியூசிலாந்துக்கு இது முக்கிய வெற்றி – ஏன் தெரியுமா?
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More