சென்னை: தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும்,அவர்களை விடுவிக்க வலியுறுத்தும்படி, முதல்வர் ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதுவதும் வாடிக்கையாகவே உள்ளது. இந்த நிலையில், இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 7 தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரக நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. […]