Kacha Badam: வேர்கடலை வியாபாரி டு வைரல் பாடகர் பூபன் பத்யாகரின் கதை தெரியுமா?

`மேற்கு வங்க மாநிலத்தில் குரல்ஜூரி என்னும் கிராமத்தில் சைக்கிளில் வேர்க்கடலை விற்று வருபவர் தான் இந்த ‘பூபன் பத்யாகர்’. எப்போதும் பாடல் பாடிக்கொண்டே வேர்க்கடலை விற்று வருவதுதான் இவரது இயல்பு. அவ்வாறு வேர்க்கடலை விற்றுக்கொண்டே ‘கச்சா பாதாம்’ என்று வாயில் முணுமுணுத்த படி இவர் பாடிய பாடலுக்கு ரசிகரான அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபர், கடலை விற்றுக்கொண்டே பாடல் பாடும் பூபன் பத்யாகரை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதற்குப்பின் அவரது கிராம மக்கள் மட்டுமே ரசித்துக் கொண்டிருந்த அவரது கச்சா பாதாம் பாடலை உலகெங்கும் உள்ள மக்கள் ரசிக்கத் தொடங்கினர்.

இவ்வாறு சமூக வலைதளங்களில் வைரலான இவரது பாடலை கண்ட ரான்-இ மற்றும் பிரக்யா டுட்டா(Ron-E & pragya dutta) ஆகிய இருவரும் பூபன் பத்யாகரை அழைத்துப் பாட வைத்தனர். அவரது குரலிலியே அவரது பாடலைக் காட்சிப்படுத்தி புதுப்பொலிவுடன் வெளியான `கச்சா பாதாம்’ பாடல் பல மில்லியன்களைக் கடந்து இன்னும் வைரலாகி வருகிறது. மேலும் தமிழில்கூட வடிவேலு வெர்சன் போன்ற பல வெர்சனில் கலக்கி ஹிட் அடித்து வருகிறது இப்பாடல். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், பேஸ்புக் ஸ்டோரி மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் என இவரது பாடலுக்கு நடனமாடியும், இமிடேட் செய்தும் பல வீடியோக்கள் படையெடுத்து வைரலாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா இந்தப் பாடலை இமிடேட் செய்து நடனமாடிய வீடியோ வைரலானது. சாதாரணமாக வேர்க்கடலை விற்றுக் கொண்டிருந்த பூபன் பத்யாகர் `kacha badam’ என்னும் ஒரே ஒரு பாடல் மூலம் தற்போது இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவில் பேமஸாகி வருகிறார்.

மேலும் இவரது பாடலைப் பார்த்த மேற்குவங்க காவல் துறை இவரை நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறது. இதுபற்றிக் கூறும் பூபன் பத்யாகர், தான் கனவில் கூட இவ்வாறெல்லாம் நடக்கும் என்று எதிர்பாக்கவில்லை என்றும் பாலிவுட்டில் இருந்து என்னை யாரும் அணுகவில்லை. எனக்கு ஹிந்தியெல்லாம் தெரியாது என நகைச்சுவையுடனும் கூறியிருந்தார்.

மேற்குவங்க காவல் துறை பாராட்டியப் படம்

மேலும் “எனது பாடலை யார் யாரோ சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள். அதன் மூலம் எனக்கு எந்த லாபமும் இல்லை. எனவே பாடலுக்கு காப்பி ரைட் வாங்கப்போகிறேன் எனக் கூறியிருக்கிறார்.

மேலும் பூபன் பத்யாகரின் அடுத்த பாடல் சவ்ரவ் கங்குலியுடன் சேர்ந்து பாடி நடிக்கப்போவதாகவும், இப்பாடல் இந்த மாதம் பிப்ரவரி 19-ல் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இனி இவர் கடலை வியாபாரத்தையெல்லாம் மூட்டைகட்டி விட்டு முழு நேர பாடகராகி விடுவார் போலும். இணையதளம் இதுபோன்ற சாமானிய மக்களின் திறமைகளை எல்லாம் எளிதில் உலகமுழுவதும் கொண்டு சேர்க்கும் விதத்தில் வளர்ந்துள்ளது மகிழ்ச்சிக்குரியதே என்று மக்கள் பூபன் பத்யாகரின் வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்தது வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.