புதுடில்லி: ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 29 பழங்கால சிலைகள் உள்ளிட்ட பொருட்கள் டில்லி வந்தடைந்தது. இதனை பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.
ஆஸ்திரேலியாவில் இருந்து 29 இந்திய சிலைகள் உட்பட பழங்கால பொருட்களை மத்திய அரசு மீட்டுள்ளது. இதில், சீர்காழி அருகே பழங்கால கோவிலில் இருந்த ஞானசம்பந்தர் சிலைகளும் அடங்கும். மற்றவைகள் ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவை.
ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு இந்தியா கொண்டுவரப்பட்ட 29 பொருட்களும் சிவன், சக்தி, விஷ்ணு, ஜெயின் பாரம்பரியம், உருவப்படங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் என ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பழங்கால பொருட்களும் மணற்கல், பளிங்கு, வெண்கலம், பித்தளை, காகிதம் போன்ற பொருட்களால் செய்யப்பட்டுள்ளன. இந்த பொருட்களை இன்று (மார்ச் 21) பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். இந்தியா – ஆஸ்திரேலியா இருதரப்பு உச்சி மாநாடு இன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுடில்லி: ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 29 பழங்கால சிலைகள் உள்ளிட்ட பொருட்கள் டில்லி வந்தடைந்தது. இதனை பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.ஆஸ்திரேலியாவில் இருந்து 29 இந்திய சிலைகள்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.