பட்டா பிழை திருத்தம் மேற்கொள்ள லஞ்சம் வாங்கிய தாசில்தார் மற்றும் விஏஒ கைது

திருச்சி மாவட்டத்தில் பட்டா பிழை திருத்தம் மேற்கொள்ள லஞ்சம் வாங்கியதாக தாசில்தார் மற்றும் விஏஒ கைது செய்யப்பட்டனர்.

கல்லக்குடியை சேர்ந்த லெட்சுமி, அவருக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவில் பிழை திருத்தம் செய்ய லால்குடி தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்த நிலையில் அதற்கு லால்குடி துணை தாசில்தார் பிரபாகரன் மற்றும் முதுவத்தூர் விஏஓ சதீஷ்குமார் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத லெட்சுமி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்ததையடுத்து, அவர்களின் அறிவுறுத்தலின்படி ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக கொடுத்தபோது, மறைந்திருந்த அதிகாரிகள் பிரபாகரன் மற்றும் சதீஷ் குமாரை கையும் களவுமாக கைது செய்தனர். 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.