புதுடெல்லி:
கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.
அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 2,827 ஆக இருந்தது. நேற்று 2,841 ஆக உயர்ந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக டெல்லியில் 899 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
கேரளாவில் 419, அரியானாவில் 439, மகாராஷ்டிராவில் 263, உத்தரபிரதேசத்தில் 175, கர்நாடகாவில் 156 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 19 ஆயிரத்து 112 ஆக உயர்ந்தது.
தொற்று பாதிப்பால் மேலும் 11 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் திருத்தியமைக்கப்பட்ட பட்டியலில் 5 மரணங்கள் சேர்க்கப்பட்டதும் அடங்கும்.
இதுதவிர டெல்லியில் 4 பேர், மகாராஷ்டிராவில் 2 பேர் நேற்று இறந்துள்ளார். மொத்த பலி எண்ணிக்கை 5,24,201 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 3,355 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 76 ஆயிரத்து 815 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 18,096 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றைவிட 508 குறைவு ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 15,04,734 டோஸ்களும், இதுவரை 191 கோடியே 15 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.