வீடு புகுந்து இளைஞர் படுகொலை… மர்ம நபருக்கு வலைவீச்சு.. திண்டுக்கல் அருகே பரபரப்பு..!

வீடு புகுந்து இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், பவனம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகர் . இவர் அந்த பகுதியில் பெயிண்ட்ரராக பணியாற்றி வருகிறார். நேற்றிரவு தனது வீட்டில் உறங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பிரபாகரனின் கழுத்தை அறுத்தவிட்டு தப்பி சென்றார்.

இதுகுறித்து, தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின்  சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்தவர்  யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.