இந்தியாவின் பல மாநிலங்களில் பற்றி எரியும் ரயில்கள்! நாடு முழுவதும் பரவிய போராட்டம்


இந்திய அரசு அறிவித்த அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் ரயில்கள் கொளுத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணி உள்ளிட்ட அம்சங்களுடன் இந்திய அரசுஅக்னிபாத் எனும் புதிய திட்டத்தை அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பீகாரில் போராட்டத்தில் குதித்த பல்வேறு ரயிலை தீ வைத்து கொளுத்தினர்.

இந்த நிலையில் இன்றைய தினம் தலைநகர் டெல்லி முதல், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களிலும் போராட்டம் வெடித்துள்ளது.

அம்மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் ரயில்களை தீ வைத்து எரித்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அரியானாவில் உள்ள குருகிராமில் போராட்டத்தை நிறுத்த 144 தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல மாநிலங்களில் பற்றி எரியும் ரயில்கள்! நாடு முழுவதும் பரவிய போராட்டம்

இந்தியாவின் பல மாநிலங்களில் பற்றி எரியும் ரயில்கள்! நாடு முழுவதும் பரவிய போராட்டம்

பீகாரில் உள்ள பாஜக அலுவலகத்தை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். அம்மாநிலத்தில் மூன்று ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

தெலங்கானா மாநிலம் செகத்திராபாத்தில் உள்ள ரயில் நிலையத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்கு இரண்டு ரயில் பெட்டிகளுக்கு தீ வைத்து எரித்தனர். மேலும் பொருட்களை தீயிட்டு கொளுத்தினர்.

இந்தியாவின் பல மாநிலங்களில் பற்றி எரியும் ரயில்கள்! நாடு முழுவதும் பரவிய போராட்டம்

இந்தியாவின் பல மாநிலங்களில் பற்றி எரியும் ரயில்கள்! நாடு முழுவதும் பரவிய போராட்டம்

இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தில் வயது வரம்பை 23 ஆக உயர்த்தியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் ராணுவத்தில் ஆள்சேர்ப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே அறிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.