முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்…

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி பயணத்தின்போது, பிரதமர் மோடி மற்றும் விளையாட்டு துறை அமைச்சரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் வரும்  28ஆம் தேதி 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அருகே உள்ள  மாமல்லபுரத்தில் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்ள சென்னை வர இருக்கிறார். இதனால், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளில் தமிழ்நாடு அரசு தீவிரமாக செய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்ல உள்ளார். அவர் டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடியை அழைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.