ஆந்திரா: தொழிற்சாலையில் திடீர் விஷ வாயு கசிவு; வாந்தி, மயக்கம்.. 121 பெண்கள் மருத்துவமனையில் அனுமதி!

ஆந்திர மாநிலம், அனகாப்பள்ளி பகுதியில் செயல்பட்டுவரும் ஆடை தொழிற்சாலை ஒன்றில் நேற்று இரவு ஏற்பட்ட விஷ வாயு கசிவால் 121 பெண்கள் நோய் வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த தொழிற்சாலையின் சிலிண்டரிலிருந்து விஷ வாயு கசிந்து தொழிற்சாலை முழுவதும் பரவியது. விஷ வாயு பரவுவதை உணர்ந்த ஒரு சில பெண் பணியாளர்கள் தொழிற்சாலையிலிருந்து வெளியே ஓடினார்கள். மேலும், பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வாந்தி எடுத்து மயக்கமடைந்து கீழே விழுந்தனர்.

ஆந்திரா மாநிலத்தில் விஷ வாயு கசிவு

இதையடுத்து, அவர்கள் உடனடியாக மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தற்போது 121 பெண் தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று உயர்மட்டக் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.

ஜெகன் மோகன் ரெட்டி

இந்தக் குழு வாயு கசிவு சம்பவம் குறித்து ஆய்வு செய்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும்… இந்த விபத்துக்கான காரணத்தை அறியவும் முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். மேலும் மறு உத்தரவு வரும் வரை நிறுவனத்தை மூடுமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.