19/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,754 பேருக்கு கொரோனாபாதிப்பு… 15,220 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,754 பேருக்கு கொரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 15,220 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 3.47 சதவிகிமாக உள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்ட உள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும்,  15,754 பேர் பாதித்துள்ளனர்.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,43,14618 ஆக உயர்ந்தது.

நேற்று மேலும் 47 பேர்  சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,27,253 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 15,220 பேர் குணமடைந்து உள்ளனர்.  இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,36,85,535 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.58% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 1,01,830பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.23% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை  2,09,27,32,604 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 31,52,882  பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.