தூத்துக்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஊராட்சி மன்ற தலைவரை வெட்டி கொலை செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவரான பொன்ராஜ், தனது தோட்டத்தில் இருந்தபோது, அங்கு புகுந்த மர்ம நபர்கள், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பியோடினர். இந்த கொலை வழக்கு தொடர்பாக அதே ஊரை சேர்ந்த கார்த்திக், வசந்த் ஆகிய இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 15ஆம் தேதி மழைநீர் வடிகால் அமைப்பது தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதில் இருதரப்புக்கு இடைய ஏற்பட்ட பிரச்னைல் அவதூறாக பேசியதால்  ஏற்பட்ட முன்விரோதத்தால் கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.