பிரிட்டன் பிரதமரின் முதல் உரை…நாட்டு மக்களுக்கு அளி்த்த மூன்று வாக்குறுதிகள்!

பிரிட்டனின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கை தோற்கடித்தார். பிரிட்டன் சட்டப்படி கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவருக்கே நாடடின் பிரதமர் பொறுப்பும் அளிக்கப்படும்.

இதன்படி பிரிட்டனின் புதிய பிரதமராகவும், நாட்டின் மூன்றாவது பெண் பிரதமராகவும் லிஸ் டிரஸ் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இங்கிலாந்து ராணியான இரண்டாவது எலிசபெத் அவரை பிரதமராக முறைப்படி நியனம் செய்தார்.

பிரதமர் பொறுப்பை ஏற்றபின் லண்டன் திரும்பியதும் முதல் வேளையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் லிஸ் டிரஸ். அப்போது அவர், நாட்டின் பொது சுகாதார சேவையை மேம்படுத்துவது, உக்ரைன் -ரஷியா போரினால் ஏற்பட்டுள்ள எரிசக்தி பிரச்னையை தீர்ப்பது ஆகிய மூன்று விஷயங்களில் மட்டும் தீவிர கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்தார். பிரதமராக தமது முதல் உரையிலேயே மூன்று முக்கிய வாக்குறுதிகளை அளித்து நாட்டு மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளார் லிஸ் டிரஸ்.

Liz Truss: பிரிட்டன் பிரதமர் ஆகிறார் லிஸ் டிரஸ் – ரிஷி சுனக்கை வீழ்த்தினார்!

முன்னதாக பர்கிங்ஹாம் அரண்மனையில் ராணி எலிசபெத்தை சந்தித்த போரிஸ் ஜான்சன், தமத பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுகொண்ட ராணி, லிஸ் டிரஸை இங்கிலாந்தின் புதிய பிரதமராக அதிகாரபூர்வமாக நியமித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.