விருதுநகர்: விருதுநகரில் 2 லட்சம் சதுர அடியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்.15) அடிக்கல் நாட்டினார்.
மதுரையில் பள்ளியில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதைத் தொடங்கிவைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் விருதுநகர் வந்தார். மாவட்ட எல்லையான கே.உசிலம்பட்டி பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பளித்தனர்.