சிறை வாழ்க்கை அனுபவிக்க உத்தரகண்டில் புதிய ஏற்பாடு| Dinamalar

டேராடூன்:ஜாதகத்தில் ஏற்பட்டு உள்ள தோஷத்துக்கு தீர்வாக ஜோதிடர்களின் பரிந்துரையை ஏற்று, உத்தரகண்ட் சிறை நிர்வாகம் புதிய வசதிக்கு ஏற்பாடு செய்துள்ளது.உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்குள்ள ஹல்த்வானி சிறையில், புதிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சிலருக்கு ஜாதகத்தில் தோஷம் இருந்தால், சிறை செல்ல நேரிடும் என்று ஜோதிடர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு மாற்று ஏற்பாடாக, தானாகவே ஒரு நாள் சிறையில் இருக்கலாம் என்ற பரிகாரத்தையும் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக சிறை அதிகாரிகளுடன் இந்தப் பகுதியைச் சேர்ந்த ஜோதிடர்கள் பேசியுள்ளனர். அதையடுத்து, சிறை வளாகத்தில் பயன்படுத்தாத ஒரு பகுதியை, தற்காலிக சிறையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இங்கு, 500 ரூபாய் செலுத்தினால், ஒரு இரவில் விருந்தாளியாக தங்கலாம்; கைதிகளுக்கான உடை, உணவு வழங்கப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.