கனமழை எதிரொலி: பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!

வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்காத போதும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தென் மேற்கு வங்கக் கடலில், இலங்கையை ஒட்டிய பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், 13ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுதும் கன மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை
தொடர்ந்து பெய்து வருவதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.

காலாண்டு விடுமுறை நிறைவடைந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்த நிலையில் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று பிற்பகல் வரையிலும் மிக கன மழை பெய்யும்.

கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, அரியலுார், பெரம்பலுார், கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்துார், தென்காசி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.