எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு

பெங்களூரு : பெங்களூரு-ஒசூர் தேசிய நெடுஞ்சாலை எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து பைக் ஓட்டுநர் உயிரிழந்தார். பெங்களூரு ஒசூர் சாலை எலக்ட்ரானிக் சிட்டி அருகே ஆந்திராவை சேர்ந்த கோரே நாகராஜூ(33) என்பவர் மேம்பாலத்தின் மீது பைக்கில் வேகமாக பயணித்துள்ளார். இந்நிலையில் மேம்பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து எலக்ட்ரானிக் சிட்டி போக்குவரத்து காவலர்கள் சம்பவம் இடம் சென்று சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.