பகீர் கிளப்பிய பைடன்; அதிர்ச்சியில் உறைந்த எலான் மஸ்க்!

உலகிலேயே மிகவும் பிரபலமான சமூக வலைதளமாக கருதப்படும் டிவிட்டரை மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் சமீபத்தில் விலைக்கு வாங்கினார்.

இதைத் தொடர்ந்து டிவிட்டர் நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் இருந்து வந்த நிர்வாகிகளை திடீரென எலான் மஸ்க் பணியில் இருந்து நீக்கினார். அதுமட்டும் இன்றி உலகம் முழுவதும் பணியாற்றும் டிவிட்டர் நிறுவன ஊழியர்கள் பலரையும் பணியில் இருந்து நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்தவகையில் உலகம் முழுவதும் டிவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் சுமார் 7 ஆயிரத்து 500 பேரில் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒரேநாளில் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

ரேஷன் கார்டுதாரர்கள் ஹேப்பி; பொங்கலுக்கு சூப்பர் அறிவிப்பு!

இந்நிலையில் இந்த பணி நீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கை குறித்து டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில், ‘டிவிட்டரில் ஊழியர்கள் குறைப்பு தொடர்பாக, துரதிஷ்டவசமாக நிறுவனம் ஒரு நாளைக்கு 32 கோடி ரூபாயை இழக்கும்போது வேறுவழியில்லை. நிறுவனத்தை விட்டு வெளியேறும் அனைவருக்கும் 3 மாத ஊழியம் வழங்கப்படும். இது சட்டப்பூர்வமான அனுமதி அளவை விட 50 சதவீதம் அதிகம்’ என கூறி உள்ளார்.

இந்நிலையில் டெஸ்லா நிறுவன தலைவரும், டிவிட்டர் உரிமையாளருமான எலான் மஸ்க் குறித்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறி உள்ள கருத்தும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு, முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.

முக்கிய சொத்தை இழந்தார் சசிகலா?; உறவினர் செய்த நம்பிக்கை துரோகம்!

அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டு பேசியதாவது, ‘நாம் அனைவருமே தற்போது எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கியது குறித்து கவலைப்படுகிறோம்.

உலகம் முழுவதும் பொய்களை பரப்புவதற்காகவே எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கி இருக்கிறார். டிவிட்டரில் இனி எடிட்டர்கள் இல்லை. அதில், ஆபத்து இருப்பதை குழந்தைகள் எப்படி புரிந்து கொள்ள முடியும்?’ என, அதிபர் ஜோ பைடன் சற்று காட்டமாகவே பேசி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.