”Parody என குறிப்பிடாமல், பிறரின் பெயர்களில் இயங்கும் கணக்குகள் முடக்கப்படும் – சி.இ.ஓ. எலான் மஸ்க்..!

டிவிட்டரில் parody என குறிப்பிடாமல், பிறரின் பெயர்களில் ஆள்மாறாட்டம் செய்யும் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டிவிட்டரில் பொதுவாக கணக்குகளை முடக்கும் முன் பயனர்களுக்கு அது குறித்து எச்சரிக்கப்பட்டு வந்த நிலையில், இனி ‘பரோடி’ என குறிப்பிடாத கணக்குகளை எச்சரிக்காமல் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

எலான் மஸ்க் என தங்களது கணக்கின் பெயரை மாற்றி, அவரை கேலி செய்து பதிவிட்டு வந்த பல கணக்குகள் ஏற்கனவே தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.