ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்ததால், ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த இளம்பெண்..! மகாராஷ்டிராவில் பதற வைக்கும் சம்பவம்

மகாராஷ்டிர மாநிலத்தில், ஓட்டுநர் தொல்லை அளித்ததால் வேகமாக சென்ற ஆட்டோவில் இருந்து இளம்பெண் குதித்து காயங்களுடன் தப்பிய காட்சி, இணையத்தில் பரவி வருகிறது.

அவுரங்காபாத்தில் ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணிற்கு, ஓட்டுநர் பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாகவும், ஆட்டோவை வேகமாக ஓட்டிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

ஓட்டுநரின் தொல்லையில் இருந்து தப்ப, வேகமாக சென்ற ஆட்டோவிலிருந்து சாலையில் குதித்த இளம்பெண், தலையில் காயங்களுடன் மீட்கப்பட்டார். புகாரின் பேரில், ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

#WATCH #CCTV #Crime #BREAKING#Maharashtra In #Aurangabad auto driver #molested girl in moving auto,minor girl jumped from moving auto,#girlinjured

After molesting the girl jumped from speeding #auto which was caught on CCTV #ACCIDENT pic.twitter.com/udGvgMgbry

— Harish Deshmukh (@DeshmukhHarish9) November 16, 2022

“>

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.