உ.பியிலும் டெல்லி கொடூரம்.. கரும்பு தோட்டத்தில் வைத்து Ex காதலி 6 துண்டாக வெட்டி வீச்சு!

திருமணம் செய்துக்கொள்ளும்படி கேட்டு வந்த தனது லிவ்-இன் பார்ட்னர் ஷ்ரத்தாவின் கழுத்தை நெறித்து 35 துண்டுகளாக வெட்டி டெல்லியில் வீசிய அஃப்தப்பின் கொலை வழக்கு குறித்த அதிர்வலையே இன்னும் அடங்கிடாத சூழலில், முன்னாள் காதலியை கொன்று 6 துண்டுகளாக வெட்டிய கொடூரம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியிருக்கிறது.
உத்தர பிரதேசத்தின் அசம்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரின்ஸ் யாதவ். இவருக்கும் இஷாக் பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆராதனா என்ற பெண்ணும் காதல் உறவு இருந்திருக்கிறது. ஆனால் அண்மையில் ஆராதனா வேறு ஒருவரை திருமணம் செய்திருக்கிறார். இருப்பினும், பிரின்ஸ் யாதவுடன் தொடர்ந்து பழகி வந்திருக்கிறார்.
image
அதே வேளையில், தன்னை விட்டு இன்னொருவரை திருமணம் செய்துக் கொண்டதால் ஆராதனா மீது பிரின்ஸுக்கு கோபம் இருந்து வந்திருக்கிறது. ஆகையால் தனது பெற்றோர், உறவினர் சர்வேஷ் உள்ளிட்டோரின் உதவியுடன் ஆராதனாவை கொல்ல திட்டம் தீட்டியிருக்கிறார் பிரின்ஸ் யாதவ். அதன்படியே கடந்த நவம்பர் 9ம் தேதி ஆராதனாவை பைக்கில் கோவிலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் பிரின்ஸ்.
அங்கிருந்து உறவினரான சர்வேஷின் உதவியுடன் கோவிலுக்கு அருகே இருந்த கரும்புத் தோட்டத்துக்கு ஆராதனாவை கொண்டுச் சென்றதும், அங்கு வைத்து ஆராதனாவின் கழுத்தை நெறித்து கொன்றதோடு, அவரது உடலை 6 துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பையில் அடைத்து கிணற்றில் வீசியிருக்கிறார்.
image
இந்த நிலையில், கடந்த நவம்பர் 15ம் தேதி கிணற்றுக்கு அருகே அரை நிர்வாணமாக பெண்ணின் உடல் இருப்பதை உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்கவே மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் அம்பலமாகியிருக்கிறது. இதனையடுத்து ஆராதனாவை கொன்ற பிரின்ஸ் யாதவை போலீசார் கடந்த சனிக்கிழமையன்று கைது செய்ததோடு, அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, கூரிய ஆயுதங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், கொலை சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டு, பிற உடல் பாகங்களை எடுக்க பிரின்ஸை அழைத்த்சுச் என்ற போது, அங்கிருந்து தப்பிப்பதற்காக போலீசாரை மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுடவே, பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்கள். இதில் பிரின்ஸுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதுபோக, ஆராதனாவை கொல்ல உதவிய சர்வேஷ், சுமன், பிரமிளா யாதவ், மஞ்சு, ஷீலா, கலாவதி, ராஜாராம் ஆகியோர் தலைமறைவாக இருப்பதால் அவர்களையும் தீவிரமாக போலீசார் தேடி வருகிறார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.