உ.பி.யில் உள்ள 12 கிராமங்களில் மின்சாரமே இல்லாத வீடுகளுக்கு ரூ.60,000 பில்

சாம்லி: உத்தரப் பிரதேச மாநிலம், சாம்லி மாவட்டம் ஜின்ஜானா பகுதியில் கோஸ்கா உட்பட 12 கிராமங்களில் மின்சாரம் இணைப்பு நீண்ட நாட்களாக வழங்கப்படாமல் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் மேற்கண்ட கிராமங்களில் மின் மீட்டர்கள் பொருத்தப்பட்டது. அப்போது, விரைவில் மின்இணைப்பு வழங்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்து உள்ளனர். ஆனால், இதுவரை மின்இணைப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், இந்த கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் தலா ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்று பில் அனுப்பப்படுகிறது. குறிப்பாக, கோஸ்கா கிராமத்தில் 250 வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான வீடுகள் இந்த மின்கட்டணம் பில்லால் கடும் ஆத்திரமடைந்து உள்ளனர். இதை யாரிடம் சொல்வது என தெரியாமல் குமுறி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.