அப்பா கிருஷ்ணாவுக்கு நினைவாலயம் கட்ட உள்ள மகேஷ் பாபு

தெலுங்குத் திரையுலகத்தின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் மறைந்த நடிகர் கிருஷ்ணா. தெலுங்கில் 350 படங்களுக்கும் மேல் நடித்தவர். கடந்த வாரம் உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவரது மகனும், முன்னணி தெலுங்கு நடிகருமான மகேஷ்பாபு அப்பாவுக்காக ஒரு நினைவாலயம் கட்டும் முடிவில் இருக்கிறாராம்.

அவர்களது குடும்பத்தினருக்குச் சொந்தமான பத்மாலயா ஸ்டுடியோ ஐதராபாத்தில் உள்ளது. அந்த இடத்தில் கிருஷ்ணாவுக்காக ஒரு நினைவாலயம் கட்டி, அதில் அவரது உருவச் சிலை, அவர் வாங்கிய விருதுகள், அவரது படங்கள் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் என அனைத்தும் இடம் பெறும் வகையில் உருவாக்கப் போகிறாராம். தெலுங்கு நடிகர் ஒருவருக்கு இதுவரையிலும் யாரும் இப்படி ஒரு நினைவாலயம் அமைத்ததில்லை என்று சொல்லுமளவிற்கு அது இருக்க வேண்டும் என்பது மகேஷ்பாவுன் திட்டம் என்கிறார்கள். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வரலாம் என்பது டோலிவுட் தகவல்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.