க.பொ.த (உ/த) பரீட்சை 2021 பரீட்சார்த்திகளுக்கான பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று பிற்பகல் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று தெரிவித்துள்ளார்.
இதற்கான பணிகள் முழுமையாக நிறைவுப் பெற்றுள்ளதாக உயர்க் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
உயர்க்கல்வி
இந்த வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் 44 ஆயிரம் மாணவர்கள் தமது உயர்க்கல்விக்காக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
www.ugc.ac.lk இல், நுழைவு கட்-ஆஃப் மதிப்பெண்களைப் பார்க்க முடியும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.