சென்னை: திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். போக்சோ வழக்குகளில் கைது நடவடிக்கை மற்றும் புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரத்தை வழக்கு கோப்பில் பதிவு செய்து, அதற்கான காரணத்தை பதிய வேண்டும்.
