திடீரென வந்த தும்மல்..சரிந்து விழுந்து இறந்த 18 வயது இளைஞர்.. அதிர்ச்சி வீடியோ



இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தும்மல் வந்த பின் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தும்மலுக்கு பின் மரணம்

உத்தர பிரதேச மாநிலம் கித்வாய்நகர் காலி பகுதியைச் சேர்ந்தவர் ஜுபைர் (18).

இவர் தனது நண்பர்களுடன் இரவு வெளியில் மீரட் நகரில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

வீட்டுக்கு செல்லும் வழியில் அவருக்கு தும்மல் வந்துள்ளது. நடந்தபடியே தும்மிய ஜுபைர், சில விநாடிகளில் திடீரென சரிந்து விழுந்தார்.

மயங்கிய நிலையில் இருந்த அவரை எழுப்ப நண்பர்கள் முயற்சித்தனர். ஆனால் ஜுபைர் எழுந்திருக்காததால் பதறிப்போன நண்பர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு ஜுபைரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

குறித்த இளைஞர் தும்மலை தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஜுபைர் சரிந்து விழும் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.