விபத்தில் மூளைச்சாவு வாலிபர் உறுப்புகள் தானம்

சேலம்: சேலம் மாவட்டம், மல்லூரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணிகண்டன் (26). பி.காம்., பட்டதாரி. சேலம் சேகோ சர்வில் வேலை செய்து வந்தார். கடந்த 30ம் தேதி இரவு பணி முடிந்து, வீட்டுக்கு டூவீலரில் சென்றபோது, பின்னால் வந்த டேங்கர் லாரி மோதி தலையில் பலத்த காயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து அவரது உறுப்புகளை தானம் செய்ய தந்தை முருகன் மற்றும் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி இதயம், கண்கள், நுரையீரல், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகியவை அறுவை சிசிக்சை மூலம் எடுக்கப்பட்டன. இதில் இதயம் மற்றும் நுரையீரல் சென்னைக்கும், கல்லீரல் கோவைக்கும், ஒரு சிறுநீரகம் ஈரோட்டிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. மற்றொரு சிறுநீரகமும், இரு கண்களும், சேலம்  அரசு மருத்துவமனையிலேயே நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.