மாண்டஸ் புயல் எதிரொலி.. கொடைக்கானல் செல்ல தடை..!

கொடைக்கானல் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் நேற்று இரவு முதல் பலத்த காற்றும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. குறிப்பாக, கொடைக்கானலில் இருந்து வத்தலகுண்டு செல்லும் சாலையில் நேற்று இரவு 10க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளது.

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள குணா குகை, தூண் பாறை, பைன் மரக்காடு, மோயர் சதுக்கம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.